கொரோனா:இடையில் ஓடும் இலங்கை





கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் மூன்று அலைகளிலும் இலங்கை அரசாங்கமானது மூன்று விடயங்களை நிறைவேற்றிக்கொண்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னபெரும குற்றஞ்சுமத்தியுள்ளார்.

 “முதலாவது அலையில் தேர்தல் நடத்தப்பட்டது. இரண்டாது அலையின்போது 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மூன்றாவது அலையில் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிரல் இதுதானா? என்று கேள்வி எழுப்பினார்.





No comments