31 பணயக்கைதிகளை மீட்டது நைஜீரிய இராணுவம்


வடமேற்கு கடூனா மாநிலத்தில் உள்ள தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 31 வழிபாட்டாளர்களை மீட்டதாக நைஜீரிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது .

அரிகோ கிராமத்தில் ஈஸ்டர் தேவாலய ஆராதனையின் போது கடத்தப்பட்ட 31 பொதுமக்களை, விரைவான பதிலடி மூலம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் முறியடித்து, படையினர் வெற்றிகரமாக மீட்டனர் என இராணுவம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

படையினர் தாக்குதல் நடத்தியவர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகவும், அதன் விளைவாக பயங்கரவாதிகள் 31 பணயக்கைதிகளைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அது மேலும் தெரிவித்தது.

No comments