ஜ.தே.க மற்றும் சுதந்திரக்கட்சி ஆதரவுடன் கரைச்சி பிரதேசசபை வெற்றி!


பலத்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் கரைச்சி பிரதேசசபையினை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.வழமை போலவே யாழ்ப்பாண பாணியில் பேரினவாத கட்சிகளான சிறிலங்கா சுதந்திரகட்சி மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.


இதனிடையே சபையில் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது ஆதரவாளரான  வேழமாலிகிதனை தவிசாளர் ஆக்கிய மகிழ்ச்சியில் நடனமாடும் காட்சிகள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பளை பிரதேச சபை தவிசாளர் சுரேன் உள்ளிட்ட குழுவினர் நடனமாட,ஆதரவாளர்கள் விசிலடிக்க கொண்டாட்டங்கள் சபா மண்டபத்தில் நடத்தப்பட்டமை சபையின் மாண்பை மதிக்காத செயலென அவதானிகள் தெரிவிக்கின்றன.


சந்திரகுமாரின் சமத்துவக்கட்சி கரைச்சிப்பிரதேச சபைக்கு போட்டிக்களத்திலிருந்த நிலையில்  பேரினவாத கட்சிகளான சிறிலங்கா சுதந்திரகட்சி மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
(புகைப்பட உதவி:தமிழ்)

No comments