
ஈரானில் புதன்கிழமை காலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் அணு விஞ்ஞானியும் நட்டான்ஸ் யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் பணி புரிந்தவருமான முஸ்தபா அஹ்மடி ரோஷன்(32 வயது) கொல்லப்பட்டார். குறித்த காரின் சாரதியும் உயிரிழந்துள்ளார்.
தலைநகர் தெஹ்ரானின் வடக்கு வீதியில் இடம்பெற்ற இத்தாக்குதலில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.