About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 29, 2010 / பகுதி: உலக வலம் / செம்பிறை

உளவாளிகளுடன் புடின் ஆடிப்பாடி மகிழ்ச்சி

அமெரிக்காவால் விடுவிக்கப்பட்ட ரஷ்ய உளவாளிகளுக்குப் பிரகசாமான எதிர்காலம் அமைத்துத் தரப்படும் என்று ரஷ்ய பிரதமர் விளாடிமிர் படின் தெரிவித்தார். ரஷ்யாவைச் சேர்ந்த 10 உளவாளிகள், அமெரிக்காவில் பல நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டு வேவு பார்த்து வந்தனர். இவர்களை கண்டுபிடித்த அமெரிக்கா கைது செய்தது பின்னர்,ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி.ரஷ்யா கைது செய்திருந்த நான்கு அமெரிக்க உளவாளிகளை விடுவித்ததற்குப் பதிலாக ரஷ்ய உளவாளிகள் 10 பேர் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் ரஷ்யா வந்து சேர்ந்தனர் இந்நிலையில் நேற்று ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ரஷ்ய பிரதமர் புடின் கூறியதாவது ரஷ்ய உளவுத்துறையான கே.ஜி.பி உளவாளியாக கிழக்கு ஜெர்மனியில் நான் இருந்தேன் ஒர் உளவாளியாக வேலை பார்ப்பது என்பது மிகவும் கடினம் உங்கள் தாய்மொழியைப் போல நீங்கள் தங்கி இருக்கும் நாட்டின் மொழியையும் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். இப்போது ரஷ்யா திரும்பியுள்ள உளவாளிகளுக்கு நல்ல வேலை தரப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். அவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

நாங்கள் சந்தித்தோம் வாழ்க்கைப் பற்றி பேசினோம் தேசிய கீதம் உள்ளிட்ட பல பாடல்களைப் பாடினோம்.. யார் யார் துரோகம் செய்தவர்கள் என்பது எனக்குத் தெரியும் இவ்வாறு புடின் தெரிவித்தார் உளவாளிகளை அவர் எங்கு சந்தித்தார் என்பதையும் இவர்கள் பிடிபடக் காரணமாக அமெரிக்காவில் உள்ளவர்கள் பெயர்களையும் கூற அவர் மறுத்து விட்டார்.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......