அரசியல் யாப்பு மாற்றங்கள், அனைத்துக்கட்சி குழுவின் அறிக்கை, ஐக்கிய நாடுகள் சபையுடனான மோதல்கள், மேற்குலகத்தின் அழுத்தங்கள் என சிறீலங்கா அரசியலில் அதிக சம்பவங்கள் நாளுக்கு நாள் இடம்பெற்று வருகின்றன.ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்ட வன்முறைகளும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது.
சிறீலங்கா அரச அமைச்சர் விமல் வீரவன்சா கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்பாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் பின்னனியில் சிறீலங்காவுக்கு ஆதரவான நாடுகளின் இராஜதந்திர நகர்வுகள் உள்ளதை மேற்குலகமும், ஐ.நாவும் துல்லியமாக அறிந்ததை தொடர்ந்து அவை எந்த விட்டுக்கொடுப்புக்களையும் மேற்கொள்ளவில்லை.