About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 22, 2010 / பகுதி: விளையாட்டு /

800 விக்கெட்கள் முத்தையா முரளிதரனின் உலக சாதனை

கொழும்பு: உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் உலகக் கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றிலே முதன்முறையாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தி மாபெறும் உலக சாதனை படைத்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பெருமையைப் பெற்றார் முரளிதரன். காலேவில் நடைபெற்ற கிரிக்கெட்டில் முரளிதரன் வீழ்த்திய 800 வது விக்கெட் இந்திய வீரர் பிரக்யான் ஓஜாவுடையது. தற்போது காலேவில் நடைபெறும் ஆட்டத்தில் விளையாடும் முரளிதரன் மாலையில் ஒய்வு பெறுகிறார். ஓய்வு பெறும் முரளிக்கு விடை கொடுக்க காலேவில்  சிறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே முதலியோர் காலேவில் முகாமிட்டுள்ளனர். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சே மைதானத்திற்கு நேரில் வந்து முரளிதரனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். உலக சாதனை படைத்த முத்தையா முரளிதரனுக்கு அனைவரும் எழுந்து நின்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். முரளிதரனின் சாதனையை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ஆரவாரத்துடன் ரசித்தனர்.

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......