About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 16, 2010 / பகுதி: கவிதை /

எங்கே போனது மனித நேயம்?

குத்தி கிழித்து கொன்று தின்னும்
கொடிய விசமிகளே
கொன்றழிக்க நினைப்பது
ஈழத்தமிழனையா……? இல்லையேல்
மனித நேயத்தையா?
சொந்த மண்ணிலேயே
சொரி நாயை விரட்டுவது போல் நம்மவரா?
பிணப்பசி எடுக்கும் போதெல்லாம்
ஏப்பம் இடுவதற்கு தமிழத்தாயா…?
உலகிற்கு நீ உரைப்பது
ஈழத்தமிழின அழிப்பையா…… இல்லையேல்
மரணித்து நிற்கும் மனித நேயத்தையா?
வீணி சலம் ஒழுக
விரட்டுகின்றனர்
வீதி வீதியாய் அலைந்தனர்- நம்மவர்
விடிவொன்று கிட்டும் என்று
பிணமாகி போனவர்களை
நினைத்து கதறுகின்றனர்
மிகுதியாய் வதைபடுபவர்களை
நினைத்து கலங்குகின்றனர்
இதில் உலகிற்கு வெளிச்சமிடுவது
ஈழத்தமிழின அழிப்பையா…… இல்லையேல்
மரணித்து நிற்கும் மனித நேயத்தையா
இரத்தம் குடித்தவனை
அரியணையில் வைத்து
அழகு பார்ப்பதா நீதி?
உலகெங்கும் கை கோர்த்து
சிவப்பு கம்பளம் விரித்து
விருந்து உபசாரமாம்
தன் இரத்த உறவு என்றழைத்தவனுக்கு
கொடுத்த பரிசா? இதனால்
உள்ள தமிழனும் மெல்லச்சாகின்றான்
உலகிற்கு நீ உரைப்பது
ஈழத்தமிழின அழிப்பையா…… இல்லையேல்
மரணித்து நிற்கும் மனித நேயத்தையா?
தமிழ்த்தாயின் சேலை தொட்டு இழுத்து
குத்திக்கிழித்த ஆடைகளில்
இன வெறியன் விட்டுசென்ற
வடுக்கள் ஏராளம்
ஆடைகள் சுற்றப்பட்ட சலனமில்லா
உடலங்களாக பாரினில் எத்தனை பேர்
உலகிற்கு நீ உரைப்பது
ஈழத்தமிழின அழிப்பையா…… இல்லையேல்
மரணித்து நிற்கும் மனித நேயத்தையா?

- குட்டிசுபா

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......