சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பருத்தித்துறையிலிருந்து திருக்கேதீஸ் வரத்திற்கு நேரடி பஸ்சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பருத் தித்துறைப் பேருந்துச்சாலை முகாமை யாளர் எஸ்.குணபாலசெல்வம் அறி வித்துள்ளார்.

சிவராத்திரி தினத்தன்று திருக் கேதீஸ்வரத்துக்கு செல்லும் பக்தர் களின் நன்மை கருதி மேற்படி பஸ் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
எனவே குறித்த தினத்தன்று திருக்கேதீஸ்வரம் செல்ல விரும்பும் பக்தர்கள் தமக்கான ஆசனப்பதிவு களை பருத்தித்துறைச்சாலையில் செய்துகொள்ள முடியும். மேற்படி பஸ்சேவை நாளை சனிக்கிழமை முற்பகல் 10மணிக்கு இடம்பெறும். அரைச் சொகுசு பஸ்ஸுக்கான கட் டணமாக 330ரூபா அறிவிடப்பட வுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.