நலன்புரி முகாம்களில் எத்தனை பேர்? யார் கூறுவது சரி? 99,000 பேர் என்கிறது ஐ.நா.; 70,000 என்கிறது அரசாங்கம்!
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய நலன்புரி நிலையங்களில் இன்னமும் 99ஆயிரம் பேர் இருப்ப தாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவாகரங்களுக்கான ஒருங்கி ணைப்பு அலுவலகம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஆனால் நலன்புரி நிலைங்களில் 70ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியு தீன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றுமுன்தினம் பி.பி.ஸிக்கு தகவல் அளிக்கையில் கூறியவை வருமாறு
நலன்புரி நிலையங்களில் 70ஆயி ரம் பேர் உள்ளனர். ஏனையவர்கள் அவர்களின் உறவினர்களின் வீடு களில் தங்கியுள்ளனர்.
2 லட்சம் பேரை நாம் மீள்குடியமர்த்தியுள்ளோம். ஆதலால் இது ஒரு பாரிய பிரச்சனை யல்ல. இன்னும் ஓரிரு மாதங்களில் 100வீதமும் குடியமர்த்திவிடுவோம்.
எமது நோக்கம் மக்களைக் குடிய மர்த்துவதே. நாம் இதனை ஐ.நா. சபைக்குப் பயந்தோ அல்லது மேற் குலக நாடுகளுக்குப் பயந்தோ செய்ய வில்லை. நாம் ஜனவரி 31ஆம் திக திக்கு முன்னர் மீள்குடியமர்த்தி முடிக்க எண்ணியிருந்தாலும் மிதிவெடிகளை அகற்றக் காலதாமதம் ஆனதே எமக்குப் பெரிய சவாலாக இருந்தது. முகாங்களில் உள்ளவர்களது தரவு களை ஐ.நாவும் மீள்குடியேற்ற அமைச் சும் இணைந்தே வெளியிடுகின்றன என்றார்.