About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா

நலன்புரி முகாம்களில் எத்தனை பேர்? யார் கூறுவது சரி? 99,000 பேர் என்கிறது ஐ.நா.; 70,000 என்கிறது அரசாங்கம்!

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய நலன்புரி நிலையங்களில் இன்னமும் 99ஆயிரம்  பேர் இருப்ப தாக ஐக்கிய  நாடுகள் சபையின் மனித நேய விவாகரங்களுக்கான ஒருங்கி ணைப்பு அலுவலகம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.


ஆனால் நலன்புரி நிலைங்களில் 70ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியு தீன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றுமுன்தினம் பி.பி.ஸிக்கு தகவல் அளிக்கையில் கூறியவை வருமாறு
நலன்புரி நிலையங்களில் 70ஆயி ரம் பேர் உள்ளனர். ஏனையவர்கள் அவர்களின் உறவினர்களின் வீடு களில் தங்கியுள்ளனர்.

2 லட்சம் பேரை நாம் மீள்குடியமர்த்தியுள்ளோம். ஆதலால் இது ஒரு பாரிய பிரச்சனை யல்ல. இன்னும் ஓரிரு மாதங்களில் 100வீதமும் குடியமர்த்திவிடுவோம்.


எமது நோக்கம் மக்களைக் குடிய மர்த்துவதே. நாம் இதனை ஐ.நா. சபைக்குப் பயந்தோ அல்லது மேற் குலக நாடுகளுக்குப் பயந்தோ செய்ய வில்லை. நாம் ஜனவரி 31ஆம் திக திக்கு முன்னர் மீள்குடியமர்த்தி முடிக்க எண்ணியிருந்தாலும் மிதிவெடிகளை அகற்றக் காலதாமதம் ஆனதே எமக்குப் பெரிய சவாலாக இருந்தது. முகாங்களில் உள்ளவர்களது தரவு களை ஐ.நாவும் மீள்குடியேற்ற அமைச் சும் இணைந்தே வெளியிடுகின்றன என்றார்.   

 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass