இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கொத்மலை பகுதியில் மேற்கொள்ளப்படும் நீர்சக்தி மின்உற்பத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக அபிவிருத்திகளுக்காக யப்பான் 250 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. யப்பானின் இந்த உதவிகள் போர் நடைபெற்ற வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கும் விஸ்த்தரிக்கப்படவுள்ளது.
யப்பானின் அனைத்துலக கூட்டுறவு அமைப்பு சிறீலங்காவின் நீர் மின் உற்பத்திக்காக 50 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. 0.2 வீத வட்டிக்கு 40 வருட கடனாக அது வழங்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் நீர் விநியோகப் பணிகளுக்காக இந்த அமைப்பு மேலும் 54.9 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. மேலும் மாகாணசபைகளின் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக 43.9 மில்லியன் டொலர்களையும் அது வழங்கியுள்ளது. இந்த நிதியானது 0.65 வட்டி வீதத்திற்கு 40 வருட தவணையில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவிகளுக்கு மேலதிகமாக 101 மில்லியன் டொலர் கடனுதவியை தென்னிலங்கையின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக யப்பான் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.