About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Mar 12, 2010 / பகுதி: செய்தி /

நைனாதீவில் சோழர் காலத்து ஆலயம்

யாழ் குடாநாட்டின் கரையோர தீவுப்பகுதிகளில் ஒன்றான நைனாதீவுப் பகுதியில் சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:


நைனாதீவுப்பகுதியில் கி.மு 10 ஆம் நூற்றாண்டு பழமை வாய்ந்த சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது 40 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும் பேராசிரியர் பொ. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.


ராஜ ராஜ சோழன் மிகவும் பலம் மிக்க அரசனாக 985 தொடக்கம் 1014 காலப்பகுதியில் தஞ்சாவூர் மற்றும் சோழமண்டலம் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்திருந்தார்.


நைனாதீவில் கண்டறியப்பட்ட ஆலயத்தில் சுவர்களும், அத்திவாரமும், சிற்பங்களும் காணப்படுவதாகவும், சோழர் காலத்து நாணயங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


யாழ்குடாநாட்டின் தீவுப் பகுதிகளில் இதுவரை பிரித்தானியா மற்றும் டச்சு ஆட்சியாளர்களின் தடயப்பொருட்களே கண்டறியப்பட்டிருந்தன. ஆனால் சோழர் காலத்து தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.


மேலதிக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது இந்த ஆலயப்பகுதி முழுமையாக மீட்கப்படும் எனவும், தீவுப்பகுதி மக்கள் இவ்வாறான ஆலயங்களை நிர்மாணிப்பதில்லை எனவும் புஸ்பரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.


சிறீலங்காவில் தமிழ் மக்கள் தொல்பொருள் ஆராட்சிகளில் ஈடுபடுவதை சிறீலங்கா அரசு அனுமதிப்பதில்லை. தொல்பொருள் ஆராட்சியில் சிங்கள மக்களின் அதிகாரங்களே அதிகம் உள்ளன. வடக்கு – கிழக்கில் தொல்பொருள் ஆராட்சிகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசு நிதி உதவிகளையும் வழங்குவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......