About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Mar 12, 2010 / பகுதி: செய்தி /

பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால் சூறை

வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால் சூறையாடப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு சொந்தமான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னிமீதான இன அழிப்புப் போரினை அடுத்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் வழிபாடுகளும் இடைநிறுத்தப்பட்டன. மிக நீண்ட கால தொன்மை வாய்ந்த, உலகப் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாக வற்றாப்பளை அம்மன் ஆலயம் விளங்கி வருகின்றது.

 

ஆலயம் தோன்றிய காலத்தில் இருந்து 2008ம் ஆண்டுவரை வைகாசி மாதத்தில் விசாக பௌணமியை அண்மித்த வரும் திங்கட் கிழமைகளில் வைகாசி பொங்கல் நடைபெற்றுவரும். ஆங்கிலேயர் காலத்தில் குறிப்பிட்ட ஆலயத்தின் வழிபாடுகளை இடைநிறுத்த வெள்ளையர்கள் மேற்கொண்ட முயற்சிகூட அம்மனின் புதுமையால் தோல்வியடைந்ததாக ஆலயவரலாறு குறிப்பிடுகின்றது.



ஓயாத அலைகள் -01 படை நடவடிக்கை மூலம் முல்லைத்தீவு படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்படுவதற்கு முன்பாகக் கூட முல்லைத்தீவிற்கு மிக சமீபமாக உள்ள இவ் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் நடைபெற்றிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.



ஆனாலும் கடந்த ஆண்டு அந்த ஆலயத்தில் பொங்கல் பெருவிழாவை நிகழ்த்துவதற்கு சிறீலங்காப் படையினர் அனுதிக்கவில்லை. ஆலயத்தின் தொன்மை வரலாற்றில் கடந்த ஆண்டு மட்டுமே இவ் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் இடம்பெற்றிருக்கவில்லை. இதற்கான அனுமதியினை சிறீலங்காப் படையினர் ஆலய நிர்வாகத்திற்கு வழங்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.



இந் நிலையில் அண்மையில் அப்பகுதியைச் சென்று பார்வையிடுவதற்கு குறிப்பிட்ட ஆலயத்தின் உறுப்பினர்கள் சிலர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கு சென்று பார்த்த போது ஆலயத்தின் தேவைகளுக்கு என வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான மரத்தளபாடங்களும், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பழம் பெரும் பொருட்களும் காணாமல் போயுள்ளதாக அவர்கள் ஊர் மக்களிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

இன்னும் சில நாட்களில் வற்றாப்பளை மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையால் இந்த ஆண்டு சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்புக்குள் வைகாசிப் பொங்கல் நடைபெறுவதற்கான சூழல் எதிர்கொள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......