About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Mar 12, 2010 / பகுதி: செய்தி /

சீனாவுக்குப் போட்டியாக இந்தியா

சிறிலங்காவின் தென் பகுதியை அபிவிருத்தி செய்வதில் சீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்து வருகின்றன.

தென்பகுதியில் மாத்தள விமான நிலைய அபிவிருத்தி, அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி, வீதிகள் புனரமைப்பு என்று சீனா கால் பதித்துள்ளது.

 

இந்தநிலையில், 290 மில்லியன் டொலர் கடனுதவியை சீனா வழங்கும் உடன்பாடு இந்த மாதத் தொடக்கத்தில் கைச்சாத்திடப்பட்டது.


கடந்த 3ம் திகதி தொடக்கம் 5ம் திகதி வரை சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிதியமைச்சு செயலாளர் ஜெயசுந்தரவுக்கும் சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் அதிகாரிகளுக்கும் இடையில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.


இந்தநிலையிலேயே இந்தியாவும் தென்பகுதி தொடருந்து சேவை அபிவிருத்திக்காக மேலதிக கடனுதவியை வழங்கியுள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.


கொழும்பு தொடக்கம் மாத்தறை வரையிலான தெற்கு கரையோர தொடருந்து சேவை அபிவிருத்திக்கென இரண்டாவது கட்டமாக இந்தியா 67.4மில்லியன் டொலரை வழங்கவுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் ஊடாகவே இந்தக் கடனுதவி வழங்கப்படவுள்ளது.


கொழும்பில் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா முன்னிலையில் இதற்கான உடன்பாட்டில், சிறிலங்கா நிதியமமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரவும், இந்தயாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரபாகர் தலாலும் கையெழுத்திட்டனர்.


ஏற்கனவே முதற்கட்டமாக கொழும்பு – மாத்தறை தொடருந்து சேவை அபிவிருத்திக்காக 100 மில்லியன் டொலரை இந்தியா வழங்கியிருந்தது.


இந்த அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் தெற்கு கரையோர தொடருந்து பயண வேகம் மணிக்கு 100 கி.மீற்றராக அதிகரிக்கப்படும்.


இதன்மூலம் காலிக்கும் கொழும்புக்கும் இடையிலான பயண நேரம் இரண்டு மணிநேரமாக குறைக்கப்படும் என்றும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass