இந்தியாவிலிருக்கும் பில்லியனர்கள் எனப்படும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த 2009 ஆம் ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாக அமெரிக்க சஞ்சிகை ஒன்று தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருக்கும் பில்லியனர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்தது. இது 2009 ஆம் ஆண்டு 49 ஆக உயர்ந்திருக்கிறது. ஆசிய பிராந்தியத்தில் இருக்கும் 25 பெரும் பணக்காரர்களில் பத்து இந்தியர்கள் இருக்கிறார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய பெரு நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், உலகின் பெரும் வர்த்தகரான லக்ஷ்மி மிட்டலின் நிகர சொத்து மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படு கிறது.
இவர்கள் இருவருமே, உலகின் பத்து பெரும் பணக்காரர்களின் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார்கள். இதில் அம்பானி நான்காவது இடத்திலும் மிட்டல் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.