புலம் பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் காரணமாக சிறீலங்கா அரசு மேலும் வலுவூட்டப்பட்டுள்ளதாகவும் தமது முக்கியஸ்தர்கள் பலர் வரும் காலங்களில் வெளிநாட்டு பயணங்களை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் சிறீலங்காவின் அமைச்சர் கொகலிய றம்புக்வல தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இயங்கும் பலம்பெயர் தமிழர் தாயக அமைப்புக்கள பல சிறீலங்கா அரசுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருந்து வருவதாக தெரிவித்துள்ள அவர் அவ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வெளிநாட்டு பயணங்களை தொடாந்து தாம் மேற்கொள்ள உள்ளதாகவும் வெளிநாடுகளில் அதன் மூலம் வெளிநாடுகளுடன் இருதரப்பு உறவை பலப்படு;த்த உள்ளதாகவுமு; தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் நாட்டில் வினைத் திறனுடன் இருந்த போதும் தாம் வெளிநாட்டு பயணங்களை முடுக்கி விட்டிருந்ததாகவும் தற்போதும் அதை தாம் தொடர்ந்து வெளிநாடுகளில் இயங்கும் விடுதலைப்புலிகளின் அமைப்புளை முடக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ரொராண்ரோவில் விரிவுரை ஒன்றை நடாத்த செல்லவிருந்து சிறீலங்காவின் ஐக்கிய நாடுகளுக்கான வதிவிடப்பிரதிநிதி பாலித கோகண தமிழ் அமைப்புக்களின் போராட்டம் காரணமாக அவ்விரிவுரைக்கு செல்லமுடியாது திரும்பியமை குறிப்பிடத்தக்கது