About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Mar 5, 2010 / பகுதி: கட்டுரை /

தமிழரின் பிரதேசங்களைக் கபளீகரம் செய்வதில் இலங்கை அரசுக்கு இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டு உதவி அளிப்பு

(இந்தக் கீழ்காணும் கட்டுரை, இணையத்தளத்தில் வெளியாகியிருக்கும் ‘onslaught of Tamils’’என்ற ஆங்கில கட்டுரையைத் தழுவிய தமிழாக்கம்:)


இலங்கையில் “ஓய்வு பெற்ற இராணுவத்தினரை” வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றுவதற்குக் கொழும்பு போடும் திட்டத்திற்குச் சீனாவும், இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்ய முன்வருகின்றன என ஈழத்தமிழ் வட்டாரங்கள் கூறுகின்றன.


2009-ல் இலங்கைக்குக் கடன் உதவி செய்த நாடுகளில் சீனா முதலிடம் பெற்றுள்ளது. இந்தியா, தமிழ் மக்களின் பிரதேச வலுவைச் சேர்ப்பதற்கு இலங்கைக்கு உதவி செய்கின்றது. மேற்கு நாடுகள் இலங்கையின் ஆடைகள் ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்த நிலையில், அதை ஈடு செய்யும் பொருட்டு, இந்தியா தனது நாட்டிற்கு இலங்கை ஆடைகளை ஏற்றுமதி செய்யலாம் என ஒரு இந்தியத் தூதுவர் கொழும்பில் கூறியுள்ளார்.

(census) உதவ முன்வரும் நிலையில், தமிழ் வட்டாரங்களில் மக்கள் குறைந்தமையால் அவர்களின் பாராளுமன்றத் தொகுதிகளைக் குறைக்க வேண்டுமெனத் தென்புலத்தினர் வலியுறுத்துவதாகத் தமிழ் அமைப்புகள் கூறுகின்றனர்.


இருதசாப்தங்களாக யாழ்பாணத்தில் ஆயிரக்கணக்கான இலங்கை இராணுவத்தினர், மக்கள் அடர்த்தியாக வாழும் பிரதேசங்களில் உள்ள தனியார் வீடுகளைக் கபளீகரம் செய்ததுடன், அவர்களைத் திறந்த வெளிச் சிறைச்சாலைக்குள் தள்ளியுள்ளனர். சமீபத்தில், வன்னியில் குடியிருப்பதற்குத்தகுதியான கட்டடங்களை இராணுவத்தினர் பிடித்தமையால், தமிழ் அரச ஊழியர்கள்கூடத் தங்கள் வீடுகளைத் திரும்பப் பெறமுடியாது அவஸ்தைப் படுகின்றனர்.


சீனாவின் தூதர் யாங் சுபிங் Yang Xiuping திங்களன்று 50 கோடி ரூபாய் பெறுமதியான கண்ணிவெடி அகற்றும் தளவாடங்களை வடக்கின் “மீள் குடியேற்றத்திற்கு” கொடுத்துள்ளார். கடந்த வருடம், இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியாவின் கூற்றுப்படி, சீனாவிடம் இருந்து முன்கூட்டியே கட்டப்பட்ட இராணுவக் கூடாரங்களை “விடுதலை பெற்ற வடக்கில்” நிறுவ இலங்கை அரசு வாங்கியுள்ளது.


சீனா, இலங்கைக்கு 1200 கோடி டாலர்களைக் கடனாகக் கொடுத்துள்ளது. இலங்கை மொத்தமாகப் பெற்ற எல்லாக் கடன்களின் பாதியிலும் பார்க்க இத்தொகை மேலானதாகும். இலங்கை தற்போது சீனா, இந்தியா, ஈரான், ஜப்பான், மியான்மார் ஆகிய நாடுகளில் கூடுதலாகத் தங்கியிருக்கிறது என அவதானிகள் கருதுகின்றனர்.


சீனா, இலங்கை அரசை ஊக்குவிப்பதானது, இந்திய ஊடகங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது உண்மை. ஆனால், அதே நேரத்தில், அந்த ஊடகங்கள், இந்தியா இலங்கைத் தீவில் என்ன செய்கிறது என்பதை, நோக்கத் தவறியது விந்தையாக இருக்கிறது.


இந்தியாவானது, தனது “பொருளாதார, கேந்திர முக்கியத்துவத்துக்காக” தமிழரை அடக்கும் சிங்கள அரசின் போக்கை ஆதரிப்பதன் மூலம் தமிழருக்கெதிரான ஒரு நிலைப்பாட்டடைத் தொடர்ந்து நீடிக்கிறது எனத் தமிழ் மக்கள் நினைக்கின்றார்கள். ஆறு தசாப்பதங்களாக நடக்கும் இந்தியாவின் இந்தப் போக்கு இதனை உறுதிப் படுத்துகின்றது. அதே சமயத்தில், உபகண்டத்தில் வாழும் சில தமிழர்களும் தமது சுயநலத்திற்காக, ஈழத்தமிழர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் முன்னிற்பது நம்பமுடியாத செயலாகும்.


மேற்குலக நாடுகள், தமிழ் மக்களின் சுதந்திரக் கோட்பாடுகளை ஏற்க மறுத்த போதிலும், எல்லாவற்றிற்கும் மேலாக, ஓர் அரசியற் தீர்வுக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டுமெனும் அவர்களின் குரல்கள் வலுவடைந்து வருகின்றன. இன்று இலங்கைத் தீவில், மக்களுக்கு நீதி மறுத்து வரும் ஆட்சிபீடத்தின் நடவடிக்கைகளுக்கு, சர்வதேச சமூகம் ஒரு இனஅழிப்பு நடைபெற்ற யுத்தத்தை ஆரம்ப நிலையிலே தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவராத பொறுப்பற்ற நடப்புதான் காரணமெனத் தமிழ் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.


இன்றைய நிலைமை, இனஅழிப்பு என்றால் என்ன என்று தெரியாதது போல் நடிப்பதன் மூலமும் அங்கு நடப்பது இனஅழிப்பே அல்ல என்று மற்றவர்களுக்குக் கற்பிப்பதன் மூலமும், இலங்கையில் நடைபெறும் அழிவுப்பாதையை ஒற்றையாட்சியில் திருத்தியமைக்கப்படலாம் எனத் தீர்மானிப்பதன் மூலமும், தங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றுவதுமான மேற்குலக நாடுகளின் நடைமுறையில் தங்கியிருக்கிறது.


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass