About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Mar 4, 2010 / பகுதி: உலக வலம் /

சிலியில் மீண்டும் நிலநடுக்கம்-மக்கள் பீதியில்

 

பூகம்பத்தால் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சிலி நாட்டில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

கடந்த வாரம் சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 800 பேர் உயிரிழந்தனர்.

 

 

பூகம்பத்தால் வீடுகள் இடிந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறைவிடம் இன்றி தவித்து வருகின்றனர்.

 

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்துக்கு பின்னர் அவ்வப்போது பூகம்பத்துக்கு பிந்தைய அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0 மற்றும் 5.9 என பதிவாகியிருந்தது.


இதற்கிடையே தைவானின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

 

 

ரிக்டர் அளவில் 6.4 என பதிவான இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் பரவலாக பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள்  வெளியாகின்றன.

 

தைவான் தலைநகரான தைப்பேயில் இருந்து சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள கவோன்சியங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

 

பல்வேறு இடங்களிவும் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, கட்டிடங்களுக்கு சேதாரங்களும் ஏற்பட்டுள்ளன.

 

இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் உயிர் பலி குறித்து உடனடியாக தகவல்கள் இல்லை.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......