About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Feb 27, 2010 / பகுதி: உலக வலம் /

சில்லி நாட்டில் நிலநடுக்கம்.

 

தென் அமெரிக்க நாடான சில்லியைத் தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தின் காரணமான உருவான ஆழிப்பேரலைகள் ஆஸ்ட்ரேலியா, நியூ ஸீலாந்து வரை பசுபிக் பெருங்கடலி்ல் உள்ள அனைத்து நாடுகளையும் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தென் அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 3.34 மணிக்கு சிலியன் கடலோர நகரமான கான்செப்சியானில் இருந்து 115 கி.மீ. தூரத்தில் கடற்பகுதியில் ஏற்பட்டது.

 

ரிக்டர் அளவுகோலில் 8.8 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் உருவான ஆழிப்பேரலைகள் (சுனாமி) சிலி, பெரு நாடுகளின் கடலோரப் பகுதிகள் மட்டுமின்றி, பசிபிக் கடற்பகுதியில் உள்ள ஹவாய், ஜப்பான், ரஷ்யா, ஆஸ்ட்ரேலியா, நியூ ஸீலாந்து வரையுள்ள அனைத்து நாடுகளையும் அடுத்த 15 மணி நேரத்திற்குள் தாக்கும் என்று பசுபிக் சுனாமி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணித் துளிகளில் சிலி கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கியுள்ளன. 9 அடி உயரமுள்ள ஆழிப்பேரலைகள் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடலோர நகர்பகுதியான மாலே கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதென கூறப்படுகிறது. அங்கிருந்தும், 2 இலட்சம் பேர் வாழும் கான்செப்சியானிலும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.

 

இதுவரை 82பேர் உயிரிழந்தாக மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சில்லி நாட்டில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass