புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரம் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கச்சத்தீவுக்குக் கிளம்பினர்.
கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் அந்தோணியார் திருவிழா கடந்த 1978ம் ஆண்டு தடைபட்டது. உள்நாட்டுப் போரால் திருவிழா நடத்த விடாமல் தடுத்து விட்டது இலங்கை அரசு.
அதன் பின்னர் கடந்த 2001ம் ஆண்டு நடந்தது. அது 2005 வரை தொடர்ந்து நடந்து வந்தது. பின்னர் மீண்டும் 2006ம் ஆண்டு மீண்டும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இலங்கையில் தற்போது போர் ஓய்ந்துள்ளதைத் தொடர்ந்து இந்த ஆண்டு திருவிழா நாளை நடைபெறுகிறது.
இதில் வட இலங்கையைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள். அதேபோல தமிழகத்திலிருந்தும் விழாவுக்கு வருமாறு கோரி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.