Feb 8, 2010
/
பகுதி: செய்தி
/
திருமலை – கண்டி மாவட்டங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலி
திருமலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இரு
வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர்.
திருமலை – மணலாறு எல்லையில் உள்ள தென்னமரவாடிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொறிவெடியில் சிக்கி சிறீலங்கா ஊர்காவல் படைக் காவலர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இதேபோன்று, கண்டியில் அமைந்திருக்கும் மின்சார உற்பத்தி நிலையம் முன்பாக நேற்று காவற்கடமையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு சிறீலங்கா படைக் காவலர் மின்சாரம் பாய்ந்ததில் பலியாகியுள்ளார்.