கூட்டமைப்பின் ஆதரவைப் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெற கடும் முயற்சி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெறுவதற்கு அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை கைப்பற்றும் நிலை காணப்படுவதால் அரசாங்கம் இந்த முனைப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களாக நிமல் ஸ்ரீபால டீ சில்வா மற்றும் மைத்திரிபால சிறிசேனா ஆகியோர் தனித்தனியாக அரசாங்கத்தின் விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.