இந்திய50 விளையாட்டு வீரர்களில் - ரெண்டுல்கர் முதலிடம்

ஆங்கில வார பத்திரிகை ஒன்று இந்திய விளையாட்டில் முதன்மை50' வலிமை யானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் ரெண்டுல்கர்  முதலிடத்தில் உள்ளார்.

 

ஐ.பி.எல். போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி 20 ஓவர் போட்டியை பிரபலம் அடைய வைத்த லலித்மோடி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

 

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி உரிமையாளரும் போர்ஸ் இந்தியா உரிமையளாருமான விஜய் மல்லையா 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி 5-வது இடத்தில் உள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ்கல்மாடி 12-வது இடத்தில் உள்ளார்.

 

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி உரிமையாளரும நடிகையுமான பிரீத்தி ஜிந்தா 23-வது இடத்திலும், சானியா மிர்சா 50-வது இடத்திலும் உள்ளனர்.