
இது போராடும் காலம்
உங்கள் போர்வைகளை
சுரட்டித் தூரத்தே எறிந்து விட்டு
எழுந்து வாருங்கள்
தலைவனின் பாதையில்
உங்கள் தடங்களும் பதியட்டும்.
ஈழத்தாயின் மானம் காக்க
வேண்டியவர்கள் நீங்கள்
மாற்றானொருவன்
துகிலுரிய நினைக்கிறான்
ஈழத்தாயின் சேலையை.
இன்னமா உறக்கம்
உங்கள் விழிகளில்
போர்வைக்குள்
சுருண்டு படுத்தால்
ஈழத்தாயின்
மானம் காப்பது யார்?
துப்பாக்கிச் சூட்டுச் சத்தம்
ஓய்ந்து விட்டதென்பதற்காக
உங்களுக்கு எல்லாமே
கிடைத்துவிட்டதென்றாகிவிட்டதா?
பேரினவாதியின்
நிழல்
யுத்தம் தொடர்கிறது.
எமக்கான கலாச்சார பண்பாட்டு
விழுமியங்களைச் சீரழிக்கும்
யுத்தம் தொடர்கிறது
நீங்களும்
உங்களை அறியாமலேயே
அதற்குள்
உள்ளீர்ககப்பட்டுக்
கொண்டிருக்கிறீர்கள்.
சூழ்ச்சிப் போர் அரங்கேறிக்
கொண்டிருக்கிறது.
மறத்தமிழன் மாற்றானின்
அடிமை விலங்குடன்
மானமிளக்கும் கொடுமையான
நிலை வேண்டாம் எமக்கு
விழிப்புடன் இருந்தால்
விடுதலை கிடைக்கும் எமக்கு!
சுமாயிருந்தால் சோறே
கிடைக்காதபோது
தாயகம் மட்டும்
தானாய்க் கிடைத்துவிடுமா?
உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும்
எரிந்து கொண்டிருக்கும் விடுதலை தீ
அணைந்து விடக் கூடாது.
இல்லையெனில்
எமது இனத்தின் இருப்பே
இல்லாதொழிந்துவிடும்
மறவாதீர்கள்
நினைவில் கொள்ளுங்கள்
எழுந்து நில்லுங்கள்.
ஆக்கம்: கல்லடி றொபட் (நெருப்புப் பூக்கள்)
| » | அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்: சி. வரதராஜன். |
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால்
வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக்
தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்