மாவீரன் நெப்போலியன் விரும்பிய வியர்வை.

வியர்வைத் துளிகள் அரும்பாவிட்டால் மனித உடல் இறைச்சித் துண்டுகளாகி விடும். வியர்வை சுரப்பதினால் தான் உடல் உஷ்ணம் தணிந்து குளிர்மை அடைகிறது. வியர்வைக்காக வெட்கப் படவேண்டாம்.

 

நல்ல உடல் ஆரோக்கியத்தடன் இருப்பவர்களுக்கு உழைப்ப குறைவானவர்களை விட இரண்டு மடங்கு வியர்வை வெளியேறுகின்றது. விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொருநாளும் 5லீற்றர் அளவுக்கு வியர்வை வெளியேற்றப் படுகின்றது.

 

வியர்வையில் கூட ஆணாதிக்கம்தான் மேலோங்கி உள்ளதாகவும் இயல்பாகப் பெண்களை விட ஆண்களுக்கே அதிக வியர்வை சுரக்கின்றது என்கிறது மருத்துவ ஆய்வு.

 

வியர்வையின் பெளிப்பாடு என்பது நமது இரத்தத்திலுள்ள வெளியேற்றப்படவேண்டிய பொட்டாசியமும், உப்பும், நுண்கிருமிகளுடன் கூட்டணி வைப்பதால் ஏற்படும் துர் நாற்றம் தான்.

 

இயல்பாக வியர்வை வெளியேறினால்தான், இரத்த சுத்திகரிப்பும், நல்ல தோல் அமைப்பையும் பெறமுடியும்.


இயற்கை வழியில் நல்ல குளியல், காற்று புகும் இழைகளினால் ஆன மெல்லிய தளர்வான உடை அணிதல் சிறந்தது.

 

இன்னுமொரு வேடிக்கையான தகவல், மாவீரர் நெப்போலியன் அவர்கள் தனது காதலியின் வியர்வை மணத்தை வெகுவாக நேசித்தவர். அவர் தனது காதலி யோசப்பினுக்கு எழுதிய கடிதத்தில், அன்பே.. உன் இயற்கையான வியர்வை மணத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். நாளைக் காலை பாரிசுக்கு வருகிறேன். தயவு செய்து உன் உடம்பை அதற்குள் கழுவி விடாதே என்கிறது அந்த வாசகம்;

 

வியர்வை துர்நாற்றமல்ல ஒரு சிலருக்கு மிகவும் நேசிக்கும் அற்புத மணம். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?