மனதில் வேண்டாம் சுருக்கங்கள்.

எங்கே போனதென் அழகுச் சருமம்
இச்சுருக்கங்கள் வந்தது ஏனோ?
இந்தத் தளர்ச்சி வந்தது ஏனோ?

 

உடலில் தானே இச்சுருக்கங்கள்
உள்ளம் இழமையை இழந்திடவில்லை
உடலின் இளமை போனால் என்ன?
உள்ளம் இழமையை இழந்திடவில்லை.

 

உள்ளமிளமையாய் இருப்பதினாலே
வெறுமை, தனிமை அணுகுவதில்லை
புள்ளைப் போல பறந்து திரியும்
பொன்மனம் தந்திடு இறைவா! இறைவா!

 

உலர்ந்த சருகாய் உடலானாலும்
உள்ளம் இழமையை இழந்திடவில்லை
மலரின் நறுமணம் மனதில் உள்ளது
மனதை முதுமை வென்றிடலாமோ?

 

மரணம் ஒரு நாள் வந்திடும், வரட்டும்
மனதே சிறிதும் அஞ்சிட வேண்டாம்
இருக்கும் நாளை இனிதாய்ப் போக்க
இதயந் தானே நம்முறு துணைவன்

 

விருப்பு வெறுப்பு குறையக் குறைய
வெகுவாய் மனிதன் கனங்கள் மறைய
அருமையாகவே அமையும் முதுமை,
அன்புக் கடலாய் அமையும் உள்ளம்.

 

முதுமை என்பது வாழ்வின் மகுடம்
முதுமை என்பது வாழ்வின் பெருமை
முதுமை சிறக்கும் மனம் சிறந்திட்டால்
முதுமை என்பது வாழ்வின் முழுமை.