திக்குவாய் ஏற்படுவதன் காரணம். இடக்கைப் பழக்கத்தை வலக்கைப்பக்கமாக மாற்றும் போது, திக்குவாய் ஏற்படுகின்றது.

நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்றினால் குரல்வளை அசைந்து ஒலியை உண்டாக்குகின்றது. இது குரலாகத் தொண்டை, வாய், மூக்கு, நாக்கு ஆகியவற்றைக் கடந்து மேல் நோக்கி வரும் போது இவ்வுறுப்புகளின் அசைவுகளினால் வார்த்தையாக வாயின் வழி வெளிப்படும். இந்த வெளிப்பாட்டில் தங்கு தடை ஏற்படும் போது திக்குவாய் ஏற்படுகின்றது.

பொதுவாக திக்குவாய் குழந்தைகளுக்கும், சிறியவர்களுக்கும் வருகிறது. சிலருக்கு பிறவியிலேயே திக்குவாய் அமையலாம். சிலருக்கு இடையிலேயும் திக்குவாய் வரக்கூடும். இடக்கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு இது அதிகமாக வருகிறது.

இடக்கைப் பழக்கத்தை வலக்கைப்பக்கமாக மாற்றும் போது, திக்குவாய் ஏற்படுகின்றது.

திக்குவாய் என்பது பேச்சில் ஏற்படும் ஒரு தடங்கல் ஆகும். பேசிக்கொண்டிருக்கும் போது பேச்சு நின்று விடலாம். அல்லது ஒழுங்காக ஏற்படும் பேச்சுத் திக்கித் திணறலாம்; இவ்வாறு ஏற்படும் பேச்சுத் திணறல் பலவிதமாக வெளிப்படலாம்.

இவ்வாறு திக்குவாய் ஏற்படுவதற்கான காரணங்கள்:

மூளையின் ஒரு பகுதி உடலை இயக்குகின்றது. மறு பகுதியும், தன் வேலையை நிறுத்தாமல் இயங்குவதால் வார்த்தை தடுமாற்றம் ஏற்படுகின்றது. ஒரே குடும்பத்தில் பலருக்கு திக்குவாய் வருவதுண்டு. பொதுவாக குழந்தைகளுக்கு வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக புதிதாக வரும் போது திக்குகிறது. படிப்பறிவு இல்லாதவர்களுக்கு மனதில் தடுமாற்றம் இருக்குமானால் வாய் திக்கும். அதே போல சூழ்நிலைகளைப் பொறுத்தும் ஏற்படலாம்;.

திக்குவாயைக் குணப்படுத்துவதற்கு:

நோயாளியை துணிவுள்ளவர்களாக மாற்றவேண்டும். தாழ்வு மனப்பான்மையை முற்றிலும் மாற்றவேண்டும். நோயாளி திக்காமல் ஒன்றுக்கு இரண்டு முறையாகப் பேசிப் பழக வேண்டும். பேசும் போது உடலை இலகுவாக்கிக் கொள்ளவேண்டும். மூச்சுப்பயிற்சி செய்து பழகவேண்டும். கண்ணாடிமுன் நின்று பேசி அங்க அசைவுகளைக் கட்டுப்படுத்துதல்.
அதே போல மருத்துவர்களின் முறையிலும் திக்குவாயை நிவர்த்தி செய்யலாம்.

நன்றி: மருத்துவ அறிவியல் மலர்.