
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முட்டாள் தனமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையில் உள்ள மியன்மாரைச் சேர்ந்த பௌத்த துறவிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச அரசாங்கில் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் ஒருவராக விமர்சிக்கப்பட்டு வரும் மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர் தான் சுவே என்பவரை அரசு முறைப்பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய மகிந்த ராஜபக்ச தொடர்பில் அவர்கள் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள தான் சுவே இலங்கைக்கு விஜயம் செய்வது மேலும் சர்வதேச நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று பௌத்த துறவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கைக்கு நாளைய தினம் விஜயம் செய்யவுள்ள மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர் தான் சுவே கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் வழிபாடு செய்யவுள்ளதாகவும் மகிந்த ராஜபகச்சவை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகை திருப்திப்படுத்த ஆங்கிலத்தில் ஒரு அறிக்கை. எங்களை உசுப்பேத்த தமிழில் உணர்ச்சிவயமான இன்னொரு அறிக்கையா? அப்படியென்றால் பாம்புக்கு வால் மீனுக்குத் தலையா?
சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை
பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் எடுத்த விடாமுயற்சியின் பயனாக இன்று தமிழ் மக்களின் அரசியல் உலக அரசியல் அரங்கில் சிறிதுசிறிதாக முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது.
உலகத்தமிழர் நாம் அனைவரும் பாரம்பரிய தமிழர் மரபுக்கிணங்க இயற்கையோடு ஒன்றித்து, நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர் நோக்கும் தமிழர் திருநாள் இது. தமிழீழத் தாயகத்தில் சிறீலங்காவின் இராணுவ