சட்டவிரோத ஆட்கடத்தல்கள் படுகொலைகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் குறித்து 15000 முறைப்பாடுகள்

இலங்கையின் சட்டவிரோத ஆட்கடத்தல்கள் படுகொலைகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் குறித்து 15000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த மூன்று வருடங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தே 15000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் வன்னியில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் தற்போதும் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தொடரும் ஆட்கடத்தல்கள் உள்வாங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் காணமல் போதல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மகாநாம திலகரட்ன தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 410 காவல்துறை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் சட்டவரோதமான கைதுகள் மற்றும் படுகொலைகள் குறித்து காவல்துறையினர் திருப்பதி கரமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் திலகரட்டன தெரிவித்துள்ளார்.