
இலங்கையின் சட்டவிரோத ஆட்கடத்தல்கள் படுகொலைகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் குறித்து 15000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தே 15000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் வன்னியில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் தற்போதும் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தொடரும் ஆட்கடத்தல்கள் உள்வாங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் காணமல் போதல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மகாநாம திலகரட்ன தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 410 காவல்துறை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் சட்டவரோதமான கைதுகள் மற்றும் படுகொலைகள் குறித்து காவல்துறையினர் திருப்பதி கரமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் திலகரட்டன தெரிவித்துள்ளார்.

உலகை திருப்திப்படுத்த ஆங்கிலத்தில் ஒரு அறிக்கை. எங்களை உசுப்பேத்த தமிழில் உணர்ச்சிவயமான இன்னொரு அறிக்கையா? அப்படியென்றால் பாம்புக்கு வால் மீனுக்குத் தலையா?
சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை
பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் எடுத்த விடாமுயற்சியின் பயனாக இன்று தமிழ் மக்களின் அரசியல் உலக அரசியல் அரங்கில் சிறிதுசிறிதாக முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது.
உலகத்தமிழர் நாம் அனைவரும் பாரம்பரிய தமிழர் மரபுக்கிணங்க இயற்கையோடு ஒன்றித்து, நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர் நோக்கும் தமிழர் திருநாள் இது. தமிழீழத் தாயகத்தில் சிறீலங்காவின் இராணுவ