About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Nov 11, 2009 / பகுதி: செய்தி /

தமிழ் மக்களுக்கு எதிரான படை நடவடிக்கைகளில் இந்தியா நேரடியாக தொடர்பு

தமிழ் மக்களுக்கு எதிரான படை நடவடிக்கைகளில் இந்தியா நேரடியாக தொடர்பு பட்டமைக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கரையோர காவல் படைப்பிரிவிற்கு சொந்தமான இரண்டு யுத்தக் கப்பல்களை இந்திய அரசாங்கம் ஸ்ரீலங்கா கடற்படையின் பாவனைக்கு என வழங்கியுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கப்பல்கள் இந்தியாவின் யுத்த ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் தற்காலிகமாக ஸ்ரீலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் தற்போது அந்த கப்பல்களை மீள வழங்குமாறு இந்திய கரையோர காவல் பிரிவு கோரியுள்ளதாகவும் இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வரகா மற்றும் விக்ரகா எனும் இரண்டு கப்பல்களும் இந்தியாவிற்கு சொந்தமானவை என்றும் அவை தற்காலிக பயன்பாட்டிற்காகவே ஸ்ரீலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்டதாகவும் தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அவற்றை மீளவும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம் ஒன்றும் இந்திய தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

உலங்கு வானூர்திகள் தரையிறங்கும் தளம் உட்பட அதி நவீன போர் தளபாடங்கள் பொருத்தப்பட்ட இந்த கப்பல்கள் வன்னியின் இறுதி யுத்தம் நடைபெற்ற வேளை கரையோரங்களில் தஞ்சமடைந்த அப்பாவி மக்கள் மீது கடற்படை மேற்கொண்ட தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு யுத்த உபகரண உதவிகளை வழங்கவில்லை என்று கூறி வரும் இந்திய அரசாங்கம் இந்த கப்பல்கள் குறித்து எவ்வாறான விளக்கத்தை முன்வைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass