
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக மலையகத்தில் இருந்து 42 பேர் சிறீலங்கா புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளுக்கு தங்குமிடவசதி செய்து கொடுத்துள்ளதாகவும் மற்றும் வேறு சில உதவிகளை செய்ததாகவும் தாம் சந்தேகிப்பதாகவும் அவர்களிடம் விசாரணை நடாத்திய விடத்தில் அனைவரும் முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் எனவும் அறிய முடிந்ததாகவும் தெரிவித்துள்ள சிறீலங்கா புலனாய்வுத்துறை அவர்களின் வாக்குமுலங்கள் பதிவு செய்துள்ளதாகவும் அவர்களை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் வரும் 12 ஆம் நாள்வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதி மன்றும் அனுமதி வழங்கிளுள்ளது.
விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்துள்ளதாக அறிவித்த பின்னர் சிறீலங்காவின் மத்திய பகுதியில் பொரும் தொகையில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் எனக் கூறி கைது இளைஞர்கள் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் தடைவை என்பதுடன் சிறீலங்கா அரசின் இவ்வாறான நடவடிக்கைதான் ஈழத் தமிழர்கள் கடல் மார்க்கமாகவோ வேறு வழிகளிலோ வெளிநாடுகளில் தஞ்சம் கோரக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகை திருப்திப்படுத்த ஆங்கிலத்தில் ஒரு அறிக்கை. எங்களை உசுப்பேத்த தமிழில் உணர்ச்சிவயமான இன்னொரு அறிக்கையா? அப்படியென்றால் பாம்புக்கு வால் மீனுக்குத் தலையா?
சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை
பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் எடுத்த விடாமுயற்சியின் பயனாக இன்று தமிழ் மக்களின் அரசியல் உலக அரசியல் அரங்கில் சிறிதுசிறிதாக முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது.
உலகத்தமிழர் நாம் அனைவரும் பாரம்பரிய தமிழர் மரபுக்கிணங்க இயற்கையோடு ஒன்றித்து, நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர் நோக்கும் தமிழர் திருநாள் இது. தமிழீழத் தாயகத்தில் சிறீலங்காவின் இராணுவ