அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பு!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமூகம் அளித்துள்ளது என சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்கேற்றுள்ளது.

நாட்டின் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பாக இடம்பெறும் இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.