இங்கிலாந்து கிரிக்கட் வீரர் மைக்கேல் வான் ஓய்வு பெறுகிறார்.

இங்கிலாந்து அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட விரக்தியில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மைக்கேல் வான் அறிவித்துள்ளார்.

 

கடந்த 2003 ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற இவர்,   இங்கிலாந்து அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2005 ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். தொடர்ந்து அணியை திறம்ப வழிநடத்திய இவர், கடந்த 2008 ம் ஆண்டு வலது முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டார்.

 

இருப்பினும் அடுத்த வாரம் இங்கிலாந்தில் நடக்க உள்ள ஆஷஸ் தொடருக்கான அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர் பார்த்திருந்த போதும் அணி நிர்வாகம்  வாய்ப்பு அளிக்கவில்லை.

 

இதனையடுத்து அதிருப்தி அடைந்த இவர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்ததன் படி, நேற்று தனது ஓய்வை முறைப்படி அறிவித்துள்ளார்.