
ஐரோப்பிய யூத இனப் பேரழிவில் (Holocaust) பிழைத்தவரும், யூத இனச்சின்னமும், நோபல் விருது பெற்றவருமான, பேராசிரியர், எலீ வீசல் அவர்கள், தனது இணையத்தளத்தில் வெளியிட்ட செய்தியொன்றில், “எங்கே சிறுபான்மையினர் அடக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம், நாம் எமது குரல்களை எழுப்பி எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும். நம்பத்தகச் செய்திகளின்படி, சிறிலங்கா அதிகாரிகளினால் தமிழ் மக்களினது உரிமைகள் பறிக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த அநியாயம் கட்டாயமாக நிறுத்தப்படவேண்டும். தமது தாய்நாட்டில், தமிழ் மக்கள் அமைதியுடன் செழிப்படைய அனுமதிக்கப்படவேண்டும்,” என்று கூறியுள்ளார்.
அவரது கற்றறிதல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாடுகளுக்காக, பேராசிரியர் வீசல் பல விருதுகளைப் பெற்றவர். சுதந்திரத்துக்கான ஜனாதிபதி பதக்கம், அமெரிக்க காங்கிரஸ் தங்கப் பதக்கம் மற்றும் விடுதலை விருதுக்கான பதக்கம் போன்றன இவற்றுள் அடங்கும்.
கனக்றிகற் வைத்தியரும், அமெரிக்கா-செயற்பாட்டு அமைப்பான, இனஅழிப்புக்கு எதிரான தமிழர்கள் (Tamils Against Genocide) அமைப்பினது அங்கத்துவருமான, Dr. எலின் ஷான்டர், எலீ வீசல் அறநிறுவனத்தோடு, வடக்கு-கிழக்கு நிலமைகள் தொடர்பான செய்திகளை அடிக்கடி தெரிவித்து, செயற்பட்டுவந்துள்ளார் எலீ வீசல் நிறுவனமானது, தடுப்பு முகாம்களில் கட்டாயப்படுத்தி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 300,000 தமிழ் மக்கள் தொடர்பாகவும் செய்திகளை ஒழுங்காகப் பெற்று வந்துள்ளது, என னுச. ஷனடர் கூறியுள்ளார்,
“நாங்கள் கேட்டிருந்த தமிழ் மக்களுக்கான ஆதரவை பேராசிரியர் வீசல் தந்தமைக்கு நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக உள்ளோம். இவ்வாதரவு தற்போது அவரது இணையத்தளத்தில் அதிகாரபூர்வமாக்கப்பட்டுள்ளதால், யூதப் பேரழிவு மற்றும், போர்க்குற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் சிறிலங்கா வழக்கையும் கையில் எடுக்கும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்,” என Dr. ஷான்டர், தமிழ்நெற் இணையத்துக்கு, மேலும் தெரிவித்துள்ளார்.
Dr. ஷான்டர், தமிழ் மக்களினது சுயஆட்சிக்கான உரிமையைச் சட்டரீதியில் திரும்பப் பெறுவதற்காகச் செயற்படும், அமெரிக்கா தமிழ் அரசியல் செயற்பாட்டுக் குழுவின் (USTPAC) உப தலைவராகவும் உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
1978ஆம் ஆண்டில், ஜனாதிபதியின் யூதப் பேரழிவு ஆணைக்குழுவினது தலைவராக எலீ வீசல் அவர்களை, ஜனாதிபதி கார்றர் அவர்கள் நியமித்திருந்தார். பாரிஸில் அமைந்துள்ள கலாச்சாரங்களினது அகில உலகப் பள்ளியின் (Universal Academy of Cultures) தலைவரும் மற்றும் எலீ வீசல் அறநிறுவனத்தின் (Elie Wiesel Foundation) தலைவராகவும் எலீ வீசல் அவர்கள் செயற்படுகிறார்.
எலீ வீசல் அறநிறுவனமானது, வேறுபாடுகள் மற்றும் அநியாயங்கள் போன்றவற்றுக்கு எதிராகச் செயற்படுவதற்காக, எலீ மற்றும் அவரது மனைவியால், உருவாக்கப்பட்டதாகும். உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பட்டங்களை எலீ வீசல் பெற்றுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
| » | அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்: சி. வரதராஜன். |
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால்
வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக்
தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்