சட்ட விரோதமான முறையில் இரண்டு படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க முயற்சித்த 86 பேர் சிலாபம் கடற்பரப்பில் வைத்து இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு படகில் 58 தமிழர்களும் 9 சிங்களவர்களுமாக 67 பேரும் மற்றுமொரு படகில் 14 தமிழர்களும் 5 சிங்களவர்களுமாக 19 பேரும் தம்மால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களுள் இரண்டு பெண்களும், ஐந்து சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். எனவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, சிலாபம், மன்னார், நீர்கொழும்பு மற்றும் ஆனமடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டோர் கடற்படையினரால் மோதர துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.