About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 3, 2012

கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன் - மேஜர் நகுலன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்

புல்மோட்டைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன், மேஜர் நகுலன் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும், மட்டக்களப்பு காவியமான இரு மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


03.09.1995 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்து

கடற்கரும்புலி மேஜர் கண்ணாளன்
(விநாயகம் இளையதம்பி - புதுக்குடியிருப்பு,  மட்டக்களப்பு)

கடற்கரும்புலி மேஜர் நகுலன்
(கந்தையா கிருஸ்ணதாஸ் - காரைநகர், யாழ்ப்பாணம்)

கப்டன் பூவேந்தன்
(வாரித்தம்பி ஜெயக்குமார் - தாளையடி, யாழ்ப்பாணம்)

கப்டன் செங்கண்ணன்
(சிவஞானம் சிவநேசன் - கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாள் மட்டக்களப்பு மாவட்டம் திருக்கணாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்
வீரவேங்கை ஜீவகுமார்
(சித்திரவேல் உதயகுமார் - சித்தாண்டி, மட்டக்களப்பு)

குடும்பிமலைப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில்
கப்டன் சிறிதாசன்
(புவனேசசிங்கம் வேதாரணியம் - கொக்கட்டிச்சேலை, மட்டக்களப்பு)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்

சிறப்புச் செய்திகள்

May 25, 2013

சிவில் சமூகத்தினுடைய நிலைப்பாடு வட மாகாண சபை தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் எங்களுடைய கொள்கை....
May 25, 2013

பொதுநலவாய மாநாட்டிற்கென பெருமளவு நிதியை அள்ளிக்கொட்டி இலங்கை அரசு துஸ்பிரயோகம் செய்து வருவதாக எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன.....
May 24, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும்  சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்