இலங்கையில் வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் காலை 7 மணிக்கு இடம்பெற்றது.
காலைப் பூசைகள் இடம்பெற்று வசந்தமண்டப பூசையை அடுத்து முருகப் பெருமான் புனித தீர்த்தத்துக்கு எழுந்தருளினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள பெரும் எண்ணிக்கையான அடியார்கள் இன்று கூடியுள்ளதாக பதிவின் விசேட செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்தார்.






