
இந்தியாவில் இருந்து வந்து வீசா முடிந்த பின்னரும் சட்ட விரோதமான முறையில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த 53 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் துணி வியாபாரம், உணவகங்களில் பணி, சோதிடர், என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளது.
எனினும் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினமே அவர்கள் கொழும்பில் உள்ள குடிவரவு மற்றும் குடிப்பெயர்வு திணைக்களத்துக்கு அனுப்பப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட 53 பேரும் ஆரம்பக் கட்ட சட்ட நடவடிக்கைகளை அடுத்து நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.