
சீனாவில் ஏற்பட்ட மண்சரிவில் 100 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அங்கு கடந்த சில வாரங்களாக கடும் மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் தென்மேற்கே யுனான் மாகாணத்தின் டெய்ஜியா கிராமத்தில் கனமழையால், மண் சரிவு ஏற்பட்டது. இதில் 100 இற்கும் மேற்பட்டோர் மண் சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நாட்டில் மழை மற்றும் புயல் தாக்குதலால், 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழநது தவித்து வருகின்றனர். இரயில் மற்றும் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் நகரமயமாக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை அதனால் காடுகள் அழிக்கப்படுகின்றமை ஆகியனவே மண் சரிவு ஏற்படுவதற்கான பிரதான காரணமென அந்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.