.jpg)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சைகுளத்தில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை பிற்பகல் 5.30மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காந்தி கிராமம் சின்ன ஊறணியைச் சேர்ந்த கலாவள்ளி பிரதீபன்(24வயது),அம்மன் கோவில் வீதி,இருதயபுரத்தை சேர்ந்த ஜி.பிரியதர்ஷன் (27வயது) ஆகியோரே உயிரிழந்ததாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் இருவரும் நண்பர்கள் எனவும் உல்லாசமாக சென்று குளித்துக்கொண்டிருந்தபோது சுழியில் சிக்கி உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலங்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.