
சாவகச்சேரியில் மண்ணெண்ணெய் அடுப்பை பற்றவைத்தபோது அது திடீரென வெடித்து சிதறியதால் எரிகாயங்களுக்கு உள்ளான இளம் பெண் ஒருவர் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். சாவகச்சேரி சிவன் கோவில் பகுதியைச் சேர்ந்த எஸ்.கோபிகா (19 வயது) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.