கோபி அவர்களை பிரித்தானியாவில் செயற்படும் மனித நேயப்பணியாளர்கள் சிலர் சந்தித்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினர். தனது கோரிக்கைகளின் நியாயத்தன்மையினை விளக்கிய திரு. சிவந்தன் அவர்களது ஆதரவிற்கு நன்றியை தெரிவித்தார்.
ஒலிம்பிக் கிராமத்தினை பார்வையிடச் செல்பவர்கள் பலரும் திரு சிவந்தன் அமரந்துள்ளவிடத்தில் தரித்து நின்று, அங்கு விநியோகிக்கப்பட்டுவரும் சிறிலங்காவின் இனவழிப்பு தொடர்பான துண்டுப்பிரசுரங்களை பெற்றுச்செல்வதுடன் விபரங்களையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
திரு. சிவந்தனின் உடல்நிலையை பரிசோதித்த மருத்தவர்கள் அவரது இரத்த அழுத்தம் குறைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் அவர் உறுதியாக தனது உணவு தவிரப்பு போராட்டத்தினை தொடர்ந்து வருகிறார்.