
யாழ் அரியாலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியாலை காந்தி சனசமூக நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த குறித்த சிலை நேற்று முன்தினம் இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பதிவான தகவல்களுக்கு அமைய அரியாலை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
மகாத்மா காந்தி சிலை சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.