
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா இன்று திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாணைகளை எதிர்வரும் ஒக்ஸட் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி நிலஆக்கிரமிப்புக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தவை வீதியில் வைத்து கிழித்து எறிந்தமை தொடபாக யாழ்.காவல்துறை நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவினால் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.