நடுக்கடலில் மீன் பிடித்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தி, விரட்டியடித்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 28-ம் திகதி சுமார் 700 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு 8 சிறிய ரக போர்க் கப்பல்களில் ரோந்து வந்த சிறிலங்கா கடற்படையினர், மீனவர்கள் மீது கல்வீசி தாக்கி, விரட்டினர்.
அப்போது படகில் இருந்த மீனவர்கள் ஓடி படகினுள் மறைந்து கொண்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை நோக்கி திரும்பினர்.