கிளிநொச்சி திருநகர்ப் பகுதியில் பாயினால் சுற்றி பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையலில் குழந்தையுடைய எலும்புக் கூடு ஒன்று அப் பகுதி மக்களால் மீட்கப்பட்டுள்ளது..
குறித்த பகுதியில் நீண்ட காலமாக பாவனைக்கு உட்படுத்தப்படாத காணியொன்றினை காணி உரிமையாளர்கள்துப்பரவு செய்துள்ளனர்.
இதன் போது பற்றைகளை வெட்டி அகற்றிக் கொண்டு இருக்கும் வேளை பாயினால் சுற்றிமறைத்து வைக்கப்பட்ட நிலையில் குழந்தை ஒன்றில் எலும்புக் கூடு இனங்காணப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக அப் பகுதி கிராம சேவகருக்குத் தகவல் வழங்கப்பட்டு அவர்கள் ஊடாக காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் குறித்த எலும்புக்கூட்டினை அங்கிருந்து மீட்டுச் சென்றுள்ளனர்.
எனினும் குறித்த எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சம்பவ இடத்திற்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் காணி உரிமையாளர்களை விசாரணைக்கு உட்படுத்தியதுடன், தாம்அறிவிக்கும் போது படை முகாமிற்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் என்று எச்சரித்துள்ளார்கள்.