
துணுக்காயில் அமைந்துள்ள 65ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுக்காக பூநகரிக் கோட்டப் பாடசாலைகளின் தவணைப் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டு, மாணவர்கள் குறித்த நிகழ்வுக்காக படையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர். படையினரின் இத்தகைய அத்துமீறலால் கல்விச்சமூகம் மத்தியில் பெரும் விசனம் தோன்றியுள்ளது.
வித்தியாலயம், முழங்காவில் ஆரம்ப பாடசாலை, இரணைதீவு ஆர்.சி.ரி.எம்.எஸ். பாடசாலை, குமுளமுனை சி.ரி.எம்.எஸ். பாடசாலை நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை ஆகிய பூநகரி வலயத்துக்குட்பட்ட 8 பாடசாலைகளிலுமேயே தவணைப்பரீட்சையை நிறுத்திவிட்டு படையினரின் விளையாட்டு நிகழ்வுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
தவணைப்பரீட்சை அட்டவணைகள் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர் படையினரால் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டிய கட்டாயம் என்ன? என்று மாணவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்ட வன்னி மாணவர்களின் கல்வித்தரத்தை இதுபோன்ற படையினரின் அத்துமீறும் செயற்பாடுகள் வீழ்ச்சிநிலைக்கே இட்டுச்செல்லும் என்று கல்விச்சமூகம் கவலை தெரிவித்துள்ளது.