மூதூர் கொட்டியாரக்குடாக் கடல் களப்பில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமற்போன மூவரில் மற்றய இருவரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை 5.30 அளவில் குறித்த மூவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட நீர்ச்சுழியில் அகப்பட்டு நிரில் மூழ்கியுள்ளனர்.
ஒருவரது சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதுடன் ஏனைய இருவரைத் தேடும் நடவடிக்கை இன்று காலை வரை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கமைய இன்று காலை எட்டுமணியளவில் ஒரு சடலமும், ஒன்பது மணியளவில் மற்றுமொரு சடலமும் மீட்கப்பட்டுள்ளன.
மூதூர் பகுதியைச் சேர்ந்த 17, 18 மற்றும் 28 வயதான மூவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.