ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் ஆட்சியின் கீழ் 130 பொதுமக்கள் மட்டக்களப்பில் காணாமல் போயிருப்பதாக புகார்.கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக திரு. சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆட்சியிலிருந்த மூன்று ஆண்டு காலகட்டத்தில் சுமார் 130 பொது மக்கள் காணாமல் போயிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சி. யோகேஸ்வரன் அம்பலப்படுத்தியுள்ளார்.
மட்டக்களப்பின் சந்திவெளியில் தேர்தல் கூட்டமொன்றில் உரையாற்றிய திரு.யோகேஸ்வரன் அப்பகுதி பொதுமக்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் விசாரணை நடத்த எவ்வித விசாரணை குழுவையும் நியமிக்காதது ஏனென கேள்வியும் எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் புலிகளிடமிருந்து இலங்கை இராணுவத்தினரின் கைகளுக்கு மாறிய பின்னர் அவ்வட்டாரத்தில் சுமார் 300பேர் காணாமல் போயிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் எம்.பி பொன் செல்வராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
வெற்றிக்குமரன் தமிழரசி