About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்

சம்பூர் மக்களின் உணவு விவகாரத்தை அரசுதான் பார்க்க வேண்டும் - உலக உணவு திட்டம்

Jul 26, 2012

இலங்கையில் அனல்மின் நிலையம் அமையவுள்ள சம்பூர் பிரதேசத்தை சேர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அரசு மாற்றிடங்களை வழங்க முன்வந்த காரணத்தால்தான் 7 மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கான உணவு உதவிகள் நிறுத்தப்பட்டதாக உலக உணவு திட்டம் கூறுகிறது.

எந்தவிதமான அழுத்தங்களினாலும் தமது நடவடிக்கை அமையவில்லை என்றும் தம்மிடமுள்ள வளங்கள் மற்றும் மக்களுக்கான தேவைகள் பற்றி ஆராய்ந்து, எங்குள்ள மக்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்படுவதாகவும் பிபிசி தமிழோசையிடம் உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான பதில் இயக்குநர் மைக் சேக்கட் கூறினார்.

தமது சொந்தக் குடிமக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான பொறுப்பை அரசு முன்னெடுக்க முன்வருகின்ற போது, அங்கு தமது உதவிகளுக்கு தேவை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் உலக உணவுத் திட்டத்தின் பதில் இயக்குநர் கூறினார்.

பெரும் நிதிநெருக்கடியில் இருக்கின்ற உலக உணவுத் திட்டம் ஆண்டுக்கு ஒருமுறை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நடத்தும் மதிப்பீட்டின்படி வடக்கில்தான் தமது உதவிகள் தொடரும் என்றும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பதில் இயக்குநர் மைக் சேக்கட் கூறினார்.

சிறப்புச் செய்திகள்

Jun 19, 2013

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச ஊடக ஒழுங்குமுறையானது பேச்சு சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என்று சர்வதேச மனித உரிமைகள்....
Jun 19, 2013

முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இந்தியாவின் தெற்காசியாவுக்கு பொறுப்பான வெளிவிகார செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர்,......
Jun 19, 2013

தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஜே.வி.பி உறுப்பினர்கள் கொலைகளை செய்திருக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா............

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்